Saturday, January 31, 2009

Thaneer Vitto Valarthom - part 1, 2, 3, Thuklaq

என்னுடைய சித்தப்பா வாரம் தவறாமல் துக்ளக் வார இதழை வாங்கி படிக்கும் பழக்கம் உடையவர். அது முழுக்க முழுக்க அரசியல் பத்திரிக்கை என்று நினைத்து நீண்ட காலம் ஒதுக்கி இருக்கிறேன்.

ஒரு நாள் Writer S. Guru Murthy அவர்களின் இந்திய பட்ஜெட் பற்றிய கட்டுரையை படிக்க நேர்ந்தது. அது முதல் அவரது எழுத்துக்களை தவறாமல் படித்துக் கொண்டு இருக்கிறேன். இவர் துக்ளக்கில் எழுதி வெளிவந்த அனைத்துக் கட்டுரைகளையும் தண்ணீர் விட்டோ வளர்த்தோம் என்ற பெயரில் 3 பாகங்களாக Alliance Book Company (Mylapore) வெளியிட்டுள்ளார்கள். மூன்று பாகங்களும் சேர்த்து இதன் விலை ரூபாய் 525.

தண்ணீர் விட்டோ வளர்த்தோம்: எஸ். குரு மூர்த்தி (Rs. 525)
பதிப்பகம்: அல்லயன்ஸ் புக் கம்பெனி

கடந்த 5 வருடங்களாக துக்ளக்கில் வரும் S. Guru Murthy அவர்களின் அரசியல் கட்டுரைகளைப் படித்து வருகிறேன். இவர் தீவிர இந்துத்துவவாதி, BJP ஆதரவாளி, RSS மற்றும் VHP -ல் தன்னை தீவிரமாக இணைத்துக் கொண்டவர் என்று அறியப்பட்டாலும் சுதேசி இயக்கத்தின் மூலம் இந்தியாவிற்கு சேவை செய்து வருபவர். தேர்ந்த படிப்பாளி மற்றும் பொருளாதார மேதை.

இவர் அடிப்படையில் charted accountant. இவர் indian budget, world market, small scale industry மற்றும் இதர விஷயங்களைப் பற்றி எழுதிய பொருளாதாரக் கட்டுரைகளைப் படித்துவிட்டு அசந்திருக்கிறேன்.

சிக்கலான பொருளாதார விஷயங்களைக் கூட எந்த டாம்பீகமும் இல்லாமல் எளிய முறையில் புரியும்படி எழுதி விளக்கி விடுவார்.

நம்மவர்கள் மேற்க்கத்திய கலாச்சாரத்தில் திளைக்கும் போது இவர் மட்டும் Indian culture, Family structure and its specialty, Indian politics என எழுதுபவர்.

சில கட்டுரைகளைப் படிப்பதற்கு சிரமமாக இருந்தாலும், படித்து முடித்தவுடன் தெரியாத சில விஷயங்களைத் தெரிந்து கொண்ட நிம்மதியை உணரலாம்.

இவருடைய மற்ற படைப்புகளையும், வலைத்தளத்தையும் காண இங்கு செல்லவும் : http://www.gurumurthy.net

No comments: