Friday, February 20, 2009

Hitler and first world war, enathu poorattam

அடால்ப் ஹிட்லரைப் பற்றி அவருடைய எனது போராட்டம் மூலம் பூரணமாக தெரிந்து கொள்வது இயலாத காரியம். ஏனெனில் அவருடைய இளமைக்காலங்களைப் பற்றியோ அல்லது அவருடைய கஷ்ட காலங்களைப் பற்றியோ அந்தப் புத்தகத்தில் ஒரு வார்த்தையைக் கூட மறந்தும் அவர் சொல்லவில்லை.

அவருடைய நாசிசக் கொள்கை மற்றும் ஜெர்மன் விடுதலையைப் பற்றி மட்டுமே எனது போராட்டத்தில் கூறியுள்ளார். எனவே அவரைப் பற்றி வேறு சில வரலாற்று ஆசிரியர்களின் எழுத்து மூலமே தெரிந்துகொள்ள வேண்டி இருக்கிறது.

ஹிட்லர் - முதல் உலகப் போர்: சாமி நாத சர்மா (Rs. 160)
பதிப்பகம்: சாந்தி, சென்னை.

என்னுடைய நண்பன் தேவக்கோட்டை முத்துக்குமார் ஒரு வித்யாசமான பையன். என்னை தூரத்துல பார்த்துட்டாலே போதும் கிச்சா மாமான்னு ஓடி வந்துடுவான்.

அவன்கிட்ட இருக்க ஒரு specialty என்னன்னா உள்ளங்கை ஐஸ் கட்டி மாதிரி எப்பவும் சில்லுனு இருக்கும். மாமா ஒருவாட்டி கையக் கொடுங்க மாமான்னு ஒரு நாளைக்கு 4 முறை கையை கொடுக்க சொல்லி மனுசனையே ஐஸ் கட்டியில கைய வச்சா மாதிரி செஞ்சிடுவான்.

இப்படியே என்னை குளிர்ச்சி படுத்தினவன் ஒரு நாள் ஹிட்லர் - முதல் உலகப் போர் என்ற சாமி நாத சர்மா 1935 -ல் எழுதி வெளிவந்த புத்தகத்தை என் கையில் திணித்து மேலும் சிலிர்க்கச் செய்தான். "ஹிட்லர எல்லாரும் குறை சொல்லுறாங்க மாமா படிச்சி பாருங்க அவன் ஜெர்மனியின் விடுதலைக்காக தான் போராடி இருக்காருன்னு தெரியும்" -ன்னு சொன்னான். சரி மருமகன் சொல்லிட்டானேன்னு புத்தகத்தைக் கையில் எடுத்தேன்.

ஆஸ்த்திரிய இளவரசனை செர்பிய மாணவன் சுட்டுக் கொன்றதன் காரணமாக எழுந்த பிரச்சனையில் நாடுகளுக்கு இடையிலான போர் மூண்டது. 1914-ல் தொடங்கிய இந்த போரில் ஹிட்லரும் பங்கு கொள்கிறான். ஒற்றனாக, படை வீரனாக, வீரர்களுக்கு தனது பேச்சின் மூலம் ஆற்றல் கொடுப்பவாக பல வகைகளில் ஜெர்மனியின் வெற்றிக்காக உழைக்கிறான். 1918 ஆம் ஆண்டு வரை நடந்த இப்போரில் எதிர்பாராத விதமாக ஜெர்மனி படு தோல்வி அடைகிறது.

ஜெர்மனியின் விடுதலைக்காக நாஜிக் கட்சியைத் தொடங்கி, ஆட்சியைக் கைப்பற்றி ஜெர்மனியின் சர்வாதிகாரி ஆகும் வரை தேசத்தின் மீதுள்ள பற்றால் அவன் சந்தித்த கஷ்டங்களை இந்த நூல் விளக்குகிறது.

இரண்டாம் உலகப் போருக்கு முந்தய பதிப்பு என்பதால் விஷவாயுக் கிடங்கு, யூதர் கொலை போன்ற எந்தக் குறிப்பும் இந்த பதிப்பில் இல்லை.

எனது போராட்டம்: ஹிட்லர் (main kampf)
பதிப்பகம்: சாந்தி, சென்னை.

ஒரு நாள் என்னுடைய ஊர் தோழன் சார்லசுடன் ஹிட்லர் சம்மந்தமாக பேசிக்கொண்டு இருந்தேன். "Main Kampf படிச்சேன் கிச்சா தமிழ்ல படிச்சா நல்லா இருக்கும்னு" சொன்னான். சரி நண்பன் ஆச பட்டுட்டானேன்னு எப்பவும் போல kannimara library பக்கத்துல இருக்க permanent book fair-க்குப் போனேன். எவ்வளவு தேடியும் கிடைக்கவில்லை.

புத்தகத்தை தேடிக்கொண்டு இருக்கும் போது சினிமா டைரக்டர் பிரதாப் போத்தன் மாதிரி ஒருத்தர் வந்தாரு. என்னையும் அறியாமல் "Excuse me, you are much similar to cinema Director Prathap Bothan" -ன்னு ஒரு பிட்ட போட்டேன். மாதிரி தான் தெரியுறேனா? சரி என்ன book வாங்க வந்தீங்கன்னு கேட்டார். ஹிட்லரோட எனது போராட்டம்னு சொன்னேன்.

ஒ.... அதுவா chennai shanthi theater பக்கத்துல இருக்க shanthi book shop-ல கிடைக்கும் அங்க try பண்ணுங்கன்னு சொல்லிட்டு போனாரு. உடனே அந்த கடைக்கு படையெடுத்து புத்தகத்தை வாங்கினேன். அவனுக்காக வாங்கியதால் எதுக்கும் படிச்சுட்டே கொடுத்துடலாம்னு புத்தகத்தை புரட்டினேன்.

புரச்சியின் மூலமாக ஆட்சியைப் பிடிக்க திட்டமிட்ட ஹிட்லர் அரசாங்கத்தால் சிறைபடுத்தப் படுகிறார். நீதிமன்றம் அவருக்கு தண்டனை விதிக்கிறது. சிறை வாசத்தில் நேரங்கள் வீணாவதால் தான் சந்தித்த போராட்டங்களையும், நாஜிக் கட்சியின் கொள்கைகளையும் பிரதிபலிக்குமாறு ஒரு புத்தகத்தை எழுத உத்தேசிக்கிறான். இவன் யோசித்து சொல்ல சொல்ல ஹெஸ் என்பவன் தட்டச்சு செய்தான். ஒரு ஜெர்மனியனாக, தேச பக்தனாக விளங்கிய இவன் தனது கடும் முயற்சியால் ஆட்சியையும் கைப்பற்றி தனது புத்தகம் அனைவருக்கும் கிடைக்குமாறு செய்தான். ஜெர்மானியர்கள் அனைவருக்கும் புதிய ரத்தத்தைப் பாய்ச்ச இந்த புத்தகம் ஒரு துருப்பாக இருந்தது.

ஜெர்மனியை புத்துயிர் கொடுக்க தான் வகுத்த திட்டங்களை, செயல் படுத்த வேண்டிய திட்டங்களை தீவிரமான முறையில் தன் சுய சரிதையில் சொல்லுகிறான். ஹிட்லரின் உண்மையான நோக்கங்களை பிரதிபலிக்கும் புத்தகம் இது. படிக்கவேண்டிய புத்தகமும் கூட.

ஹிட்லர் - பா. ராகவன் (Rs.100)
பதிப்பகம்: கிழக்கு, சென்னை.

மேலே சொன்ன இரண்டு புத்தகங்களும் ஹிட்லரின் சமகால அரசியலையும், அவருடைய கொள்கைகளையும் விளக்குவதால் யுத்த எதிர்ப்பு மற்றும் இரண்டாம் உலகப் போருக்கான யுத்திகளைப் பற்றியும் தெரிந்துகொள்ள பா.ராகவனுடைய இந்தப் புத்தகம் உதவியாக இருக்கும்.

இரண்டாம் உலகப் போருக்கான சூத்ரதாரியாக இருந்தது ஹிட்லர்தான். அதற்கு காரணம் அவருடைய கண்மூடித்தனமான ஜெர்மானிய விடுதலைதான்.

நாஜிப்படைகள் பதினொரு மில்லியன் மக்களை விதவிதமான முறைகளில் சாகடித்தன. சாக அடிப்பதற்கு வித விதமான மரண சாலைகளை உற்பத்தி செய்திருந்தன. கொல்லப்பட்டவர்களில் யூதர்கள் மட்டும் ஆறு மில்லியன் பேர்.

உலகப் போரில் வெற்றி பெற்று ஜெர்மனியை உலக வல்லரசாக்குவேம் என்று நினைத்தவர் எப்படி தோற்றார், எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்ற காரணங்களை விறுவிறுப்பான நடையில் பா. ராகவன் இந்நூலில் பதிவு செய்துள்ளார்.


புத்தகத்தை வாங்க இங்கு செல்லவும்: Hitler - Tamil

No comments: