Tuesday, January 17, 2012

புத்தகக் கண்காட்சியில் வாங்கியவை

புத்தகக் கண்காட்சி அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே நண்பர்கள் விசாரிக்கத் தொடங்கிவிட்டார்கள். "என்ன புத்தகம் வாங்கலாம்?", "புதுவரவில் எந்தெந்த புத்தகங்கள் சிறந்தது?" போன்ற பல கேள்விகள். கடந்த ஆறுமாத காலமாக ஓயாத பயணம், அலைச்சல், தொழின்முறை சந்திப்புகள் என்றே கழிந்துவிட்டது. விட்டில் பூச்சி வெளிச்சத்தை நேசிப்பதைப் போலத்தானே சிலபல முயற்சிகளையும் வாழ்க்கையில் துணிந்து எடுக்கவேண்டி இருக்கிறது. அணு உலையால் வம்சமே பாதிக்கப்படும் அபாயம் இருக்கிறது. என்றாலும் துணிந்து அந்தத் தொழில்நுட்பத்தைக் கையில் எடுக்கிறோம். மக்களை மயக்கும் சமாதானங்களையும் கூச்ச நாச்சம் இல்லாமல் முன்வைக்கிறோம். தெரியாத விஷயத்தில் சுய விருப்பம் சார்ந்து நாம் எடுக்கும் முடிவுகளும் அப்படிப்பட்டதே. பரிட்சார்த்த முயற்சிகளும் அணு உலையைப் போன்றதே. கரணம் தப்பினால் வம்சத்தின் மரணம் கண்முன்னே நிகழ்ந்துவிடும். இங்கு "வம்சம்" என்பது என்னை நேசிக்கும், என்மேல் நம்பிக்கை வைக்கும் நண்பர்களாக இருப்பதுதான் வேடிக்கை.

"என்ன வேலை செய்யிருங்க கிருஷ்ணா?" என்று சில மாதங்களுக்கு முன்பு கவிஞர் பத்மஜா கேட்டிருந்தார்.

"சும்மாதாங்கா இருக்கேன். ஆனால் வேலை செய்தபோது உழைத்ததை விட, வெறுமனே இருக்கும்போது கடுமையாக உழைக்க வேண்டி இருக்கிறது" என்று அக்காவிடம் பகிர்ந்து கொண்டேன்.

"உண்மைதான் கிருஷ்ணா. முடிந்த வரை கூடுமான அனுபவங்களை பெற்றுக்கொள்ளுங்கள். இதுபோன்ற வாய்ப்பு எல்லா நேரங்களிலும் கிடைக்காது. உங்களுக்கான அபூர்வ தருணங்கள் காத்துக் கொண்டிருக்கிறது" என்றார். கவித்துவமாக...

அக்கா சொல்லியது போலவே அபூர்வ தருணங்கள் தாமாகவே அமைகிறது. "அனுபங்கள்" சக மனிதர்களைப் போல வீட்டு வாசலின் முன்வந்து நிற்கிறது. அவற்றை குசலம் விசாரித்து அனுப்பிவிட்டு திரும்பிப் பார்ப்பதற்குள் ஆண்டின் சரிபாதி ஓடிவிட்டது. சென்ற ஆண்டு வாங்கிய புத்தகங்களே பக்கங்கள் புரட்டப்படாமல் இருக்க, இந்த ஆண்டும் சில புத்தகங்களை வாங்க நேர்ந்தது. புனைவில் எதையுமே வாங்கக் கூடாது என்ற சுய கட்டுப்பாட்டுடனே புத்தகத் திருவிழாவிற்குச் சென்றிருந்தேன். சுயவிதிகள் பல்லிலிப்பதுதானே வாழ்வின் நுட்பமான நிதர்சனம். இந்த ஆண்டும் காலச்சுவடு புத்தகங்களையே அதிகம் வாங்க நேர்ந்தது. முக்கியமான சில புத்தகங்களை இந்த ஆண்டும் வெளியிட்டிருக்கிறார்கள். விலைதான் சற்று கூடுதல். மூச்சைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிறேன், சத்தம் கேட்கும் நேரத்தை எதிர்பார்த்து, விரைந்து ஓட வேண்டும் என்ற முழுப் பிரக்ஞையுடன். இந்த ஆண்டும் திட்டமிட்ட காரியங்கள் நிறையவே இருக்கிறது. வாசிப்பதற்கான நேரம் நிச்சயமாகக் கிடைக்காது என்று தெரிந்தே சில புத்தகங்களை வாங்கியிருக்கிறேன். அவற்றின் பட்டியல் இதோ...

காலச்சுவடு பதிப்பகம்
1. ஆனைவாரியும் பொன்குருசும் - பஷீர் (குளச்சல் மு யூசுப்)
2. உண்மையும் பொய்யும் - பஷீர் (குளச்சல் மு யூசுப்)
3. சங்கராபரணி - மாலதி மைத்ரி
4. நீலி - மாலதி மைத்ரி
5. உண்மை சார்ந்த உரையாடல் - காலச்சுவடு நேர்முகம்
6. மனக்குகை ஓவியங்கள் - சுந்தர ராமசாமி
7. வன்முறை வாழ்க்கை - கண்ணன்
8. திரும்பிச் சென்ற தருணம் - பி ஏ கிருஷ்ணன்
9. பௌத்த வாழ்க்கை முறையும் சடங்குகளும் - ஓ. ரா. ந. கிருஷ்ணன்
10. நவீன நோக்கில் வள்ளலார் - ப சரவணன்
11. நொறுங்கிய குடியரசு - அருந்ததி ராய் - க. பூரணச்சந்திரன்
12. சென்னைக்கு வந்தேன் - பழ. அதியமான்
13. கனவின் யதார்த்தப் புத்தகம் - அரவிந்தன்
14. திரைவழிப் பயணம் - உமா ஷக்தி
15. கச்சத்தீவும் இந்திய மீனவரும் - வி சூரிய நாராயணன், கே. முரளிதரன்
16. என் தாத்தாவுக்கொரு தூண்டில் கழி - ஜெயந்தி ஷங்கர்
17. ராணியுடன் ஒரு தேநீர் விருந்து - அரவிந்தன்
18. உமாவரதராஜன் கதைகள் - உமா வரதராஜன்
19. தமிழ் இதழ்கள் - ரா. அ. பத்மநாபன்
20. சோஃபியின் உலகம் - யோஸ்டைன் கார்டெர் (ஆர். சிவக்குமார்)

க்ரியா பதிப்பகம்
21. மேற்கத்திக் கொம்பு மாடுகள் - ந முத்துசாமி
22. தொலைக்காட்சி ஒரு கண்ணோட்டம் - பியர் பூர்தியு

பாரதி புத்தகாலயம்
23. உணவு நெருக்கடி - ஏ. பாக்கியம்
24. தமிழ்ச்செல்வன் சிறுகதைகள் - ச தமிழ்ச்செல்வன்
25. அரசியல் எனக்குப் பிடிக்கும் - ச தமிழ்ச்செல்வன்
26. நந்தி கிராம் – அருணன்
27. இன்னொரு சென்னை - க மாதவ்

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
28. நடிப்புக் கலையும் பேசும் படக்காட்சியும் - பம்மல் சமந்த முதலியார்
29. இலக்கிய இதழ்கள் - இ. சுந்தரமூர்த்தி, மா. ரா. அரசு
30. நாவல் கலையியல் - முனைவர் இரா. பாலசுப்பிரமணியன்
31. தமிழ் நாடகம் - நேற்றும் இன்றும் - முனைவர் கு. பகவதி

சாகித்ய அகாடமி பதிப்பகம்
32. மௌனத்தின் குரல் - வாஸந்தி
33. பருவம் - எஸ் எல் பைரப்பா – பாவண்ணன்
34. கயிறு - தகழி சிவசங்கர பிள்ளை - சி ஏ பாலன்

காவ்யா பதிப்பகம்
35. ந.முத்துசாமி கட்டுரைகள் - சி. அண்ணாமலை
36. நாடகம் - பதிவும் பார்வையும் - சி. அண்ணாமலை
37. தீராநதி - இலக்கிய இதழ் ஆய்வு - உ சஞ்சை
38. பழமொழிக் கதைகள் - முனைவர் சு. சண்முகசுந்தரம்

தமிழினி பதிப்பகம்
39. வினைப் பாகுபாட்டில் எச்சங்கள் - முனைவர் ச. சுபாஷ் சந்திர போஸ்
40. பகல் கனவு - எம் எஸ் கல்யாணசுந்தரம்
41. அம்மாவின் அத்தை - கி அ சச்சிதானந்தம்
42. தேவதேவன் கதைகள் - தேவதேவன்
43. மீனுக்குள் கடல் - பாதசாரி
44. புனைவும் வாசிப்பும் - எம் வேதசகாய குமார்
45. அ. முத்துலிங்கம் கதைகள் - முழுத்தொகுப்பு

NCBH

46. சிற்பங்களைச் சிதைக்கலாமா? - வெ. இறையன்பு
47. சங்க இலக்கியத்தில் வேளாண சமுதாயம் - பெ. மாதையன்
48. நவீன தமிழ் இலக்கியம் - சில பார்வைகள் - இரவீந்திரபாரதி

சாளரம் பதிப்பகம்
49. அசோகர் கல்வெட்டுகள் - தினேஷ் சந்திர சர்க்கார்
50. கோடுகளும் வார்த்தைகளும் - டிராஸ்கி மருது

உயிர்மை பதிப்பகம்
51. காளி நாடகம் - உன்னி. ஆர் (சுகுமாரன்)
52. அன்புள்ள கி.ரா.வுக்கு - தொகுப்பு: கி. ராஜநாராயணன்
53. கூடங்குளம் - விழித்தெழும் உண்மைகள் - ஆர் முத்துக்குமார்
54. அன்று பூட்டிய வண்டி - ந முத்துசாமி
55. துயில் – எஸ்ரா
56. நெடுங்குருதி - எஸ்ரா

பொன்னி பதிப்பகம்
57. அம்பாரம் - சிறுகதைகள் - பூமணி
58. காக்கைச் சிறகினிலே - இலக்கிய மாத இதழ்
59. ஜென் கதைகள் - சேஷையா ரவி (அகல்)
60. மஞ்சள் வெயில் யூமா வாசுகி (அகல்)

சந்தியா பதிப்பகம்
61. மரங்கள் (நினைவிலும் புனைவிலும்) - மதுமிதா(சுபா ஆண்டி கொடுத்தது)
62. ராமாவும் உமாவும் - திலீப்குமார்

உயிர் எழுத்து பதிப்பகம்
63. உப்பு நாய்கள் - லக்ஷ்மி சரவணகுமார்
64. மரங்கொத்திச் சிரிப்பு - ச. முத்துவேல்

65. மனுஷி - பாமா (விடியல்)
66. தாயார் சன்னதி - சுகா (சொல்வனம்)
67. தபால்காரன் - க.நா.சு (பானு பதிப்பகம்)
68. சென்னையும் நானும்... (நம்ம சென்னை)
69. ஏன் இந்த உலை வெறி - ஞாநி (ஞானபானு)
70. சூர்ப்பனகை - கே.வி.ஷைலஜா (வம்சி பதிப்பகம்)
71. தொலைந்து போனவர்கள் - சா கந்தசாமி (கவிதா)
72. ஒரு யோகியின் சுயசரிதம் - பரமஹம்ச யோகானந்தர்
73. ஏழு தலைமுறைகள் - அலக்ஸ் ஹேலி (சவுத் விஷன்)
74. சாமியாட்டம் - யெஸ். பாலபாரதி (அன்னை ராஜேஸ்வரி)
75. அன்டன் செகோவ் சிறுகதைகள் - தமிழில்: எம் எஸ் (பாதரசம்)
76. ஒரு ஏழை ஏறி வந்த ஏணி - முக்தா சீனிவாசன் (திருக்குடந்தை)
77. சிக்மண்ட் ஃபிராய்ட் - தி.கு. இரவிச்சந்திரன் (அலைகள் பதிப்பகம்)
78. நாடகப் பனுவல் வாசிப்பு - தொகுப்பு: வீ. அரசு, கோ. பழனி (மாற்று)
79. பரமக்குடி துப்பாக்கிச் சூடு - உண்மை அறியும் குழு (HRPC - TN)
80. ஞாலம் போற்றும் பாலம் ஐயா - வழக்கறிஞர் சீ. ஜெயராமன் (ஜெயகீதா)
81. பிரமிள் படைப்புகள் - தொகுப்பாசிரியர்: கால. சுப்பிரமணியம் (அடையாளம்)

ஆவணப் படங்கள்

1. பாலம் கலியாணசுந்தரம்
2. அம்மாப்பேட்டை கணேசன் ஆவணப்பதிவு
3. தீக்கொழுந்து (தேயிலை விவசாயிகள்)
4. பச்சை ரத்தம் (புலப்பெயர்வு பற்றிய கள ஆய்வு)
5. அறிஞர் அண்ணா வாழ்க்கை வரலாறு
6. முல்லைப் பெரியாறு ஆணை உண்மைகள்
7. இன்றும் வாழும் சோழ மன்னர்கள் கள ஆய்வு
8. மூழ்கும் நதி

Wednesday, January 4, 2012

புத்தகக் கண்காட்சி 2012

புத்தகத்திற்காக அலைந்த காலங்கள் சுவாரஸ்யம் நிறைந்தது. நீண்ட அலைச்சலுக்குப் பின், பல மணிநேர பணம் செய்து, பதிப்பகத்தின் முகவரி கண்டுபிடித்து புத்தகங்கள் வாங்கிய காலம் கூட உண்டு. “டிஸ்கவரி புக் பேலஸ்” வேடியப்பன் அதற்கெல்லாம் புண்ணியம் கட்டிக் கொண்டார். ஒரு தொலைபேசி உரையாடலில் எல்லாம் முடிந்து விடுகிறது.

இரண்டு வருடங்களாக கண்காட்சியை ஒட்டி ஏராளமான நண்பர்களுடன் சந்திப்பு நிகழ்கிறது. வாசித்து வியந்த எழுத்தாளர்களையும், புத்தக வாசிப்பால் உறவாடும் நண்பர்களையும் நேருக்கு நேர் சந்தித்து மகிழ்ச்சியுடன் பேசும் வாய்ப்பு ஆண்டிற்கு ஒரு முறைதானே கிடைக்கிறது. மேற்கொள்ளும் நீண்ட பயணங்களும், புதுப்புது விஷயங்களைத் தேடித் திரிந்தாலும் கடந்த ஆண்டில் புத்தக வாசிப்பு வெகுவாகக் குறைந்துவிட்டது. எனக்கு மிகவும் பிடித்த கேணி சந்திப்பு சார்ந்தும் எழுத முடியாத சூழல்.

1. சிஸ்டர் ஜெஸ்மி (காலச்சுவடு),
2. பாலு சத்யா சிறுகதைகள் (வம்சி, அம்ருதா),
3. அவன்-அது=அவள் – பாலபாரதி (தோழமை),
4. அன்பின் வழி - க நா சு
5. லக்ஷ்மி சரவணகுமாரின் சிறுகதைகள்

-ஆகியவற்றைத் தவிர்த்து வேறெதுவும் படிக்க இயலவில்லை. இந்த புத்தகங்களை நண்பர்களுக்கு பரிந்துரை செய்கிறேன். நகர வாழ்வின் சிக்கல்களுக்கு உள்ளாகும் மனித இருப்பின் ரெண்டுங்கெட்டான் தனத்தை பாலுசத்யா தன்னுடைய கதைகளில் பதிவு செய்திருப்பார். திருநங்கைகள் குறித்த பாலபாரதியின் நாவலும் அதன் தன்மையில் முக்கியம் வாய்ந்ததே. நீலாநதி –எனும் லக்ஷ்மி சரவணகுமாரின் சிறுகதைகள் முழுவதும் வாசிக்க இயலவில்லை. படித்த வரை வித்யாசமான வாசிப்பனுபவமாகவே அமைந்தது. இந்தப் புத்தகங்களை அழுத்தமாகவே நண்பர்களுக்குப் பரிந்துரை செய்கிறேன்.

சமீபத்தில் ஏற்பாடாகியிருந்த “அழகர்சாமி குதிரை” திரைப்பட கலந்துரையாடலுக்காக “கனகதுர்கா – வம்சி செளியீடு” தொகுப்பிலுள்ள சில கதைகளை வாசிக்க நேர்ந்தது. மீள் வாசிப்பிலும் சிறுகதைகள் ஃபிரெஷ்ஷாகவே இருந்தது. இணையத்திலும் முன்போல் படிக்க நேரம் கிடைப்பதில்லை. அப்படியே கிடைத்தாலும் முகநூலில் நண்பர்களுடன் மேற்கொள்ளும் அரட்டையில் நேரம் கழிந்து விடுகிறது.

காலச்சுவடு பதிப்பகத்தில் நல்ல பல புத்தகங்கள் வெளிவர இருக்கிறது. முக்கியமாக மொழிபெயர்ப்புப் புத்தகங்கள். ஏற்கனவே சில புத்தகங்களுக்கு முன்பணம் கூட செலுத்தியிருக்கிறேன். சென்ற வருடமே சாகித்ய அகாடமி அரங்கிற்குச் சென்று ஏராளமான மொழி பெயர்ப்பு புத்தகங்கள் வாங்கப்பட்டும் பக்கங்கள் புரட்டப்படாமல் இருப்பது நெஞ்சைப் பிசைகிறது.

சென்றவருடப் புத்தகப் பரிந்துரை

இந்த ஆண்டிற்கான விழா இதோ துவங்கிவிட்டது. ஆய்வுக் கட்டுரைகளையும், திறனாய்வுக் கட்டுரைகளையும், தத்துவ விசாரணை புத்தகங்களையும் பட்டியலில் வைத்திருக்கிறேன். நண்பர்கள், சிலருடைய படைப்புகளை கூகிள் பஸ்சில் குறிப்பிட்டிருந்தார்கள். கூகுள் நிறுவனம் பஸ்சை நிருத்திவிட்டமையால் நண்பர்கள் இங்கு மீண்டும் பரிந்துரை செய்யவும்.

உங்களுடைய பதிலை ஆவலுடன் எதிர் நோக்கிக் காத்திருக்கிறேன்.

(முற்றும்)

மேலும் சென்னை புத்தகக் காட்சியில் தினசரி படைப்பாளியுடன் நேருக்கு நேர் நிகழ்த்சி “க.நா.சு” நூற்றாண்டு விழாவை ஒட்டி நடைபெற இருக்கிறது. தினமும் மாலை F-35 அரங்கில் நண்பர்கள் கலந்துகொண்டு விழாவை சிறப்பிக்கலாம். பின்வரும் அட்டவணையில் முக்கியமான படைப்பாளிகள் விழாவில் பங்குகொள்ள இருக்கிறார்கள்.

வெ 6- மாலை 6-8 மணி- சா.கந்தசாமி

சனி 7- மதியம் 3-5 மணி- பெருமாள் முருகன்
மாலை 6-8 மணி- கி.ராஜநாராயணன்

ஞா 8- மதியம் 3-5 மணி- கவிஞர் சுகுமாரன்
மாலை 6-8 மணி - எஸ்.ராமகிருஷ்ணன்

தி 9 மாலை 6-8 மணி- கண்மணி குணசேகரன்

செ 10 மாலை 6-8 மணி- அ.மார்க்ஸ்

பு 11- மாலை 6-8 மணி- சு.வெங்கடேசன்

வி 12- மாலை 6-8 மணி- இரா நடராஜன்

வெ 13-மாலை 6-8 மணி- அழகிய பெரியவன்

சனி14-மதியம் 3-5 மணி- மனுஷ்யபுத்திரன்
மாலை 6-8 மணி- பிரபஞ்சன்

ஞா 15- மதியம் 3-5 மணி- பாமா
மாலை 6-8 மணி- அசோகமித்திரன்

தி 16- மதியம் 3-5 மணி- ஆதவன் தீட்சண்யா
மாலை 6-8 மணி- சாரு நிவேதிதா

செ17- மதியம் 3-5 மணி- இந்திரா பார்த்தசாரதி
மாலை 6-8 மணி- தமிழ்ச்செல்வன்