Tuesday, February 24, 2009

Maha Vamsam

மகாவம்சம்: R.P. சாரதி (Rs. 130)
பதிப்பகம்: கிழக்கு

புத்தகத்தை வாங்க இங்கு செல்லவும்: Mahavamsam, Ancient History of Sri lanka

இந்தப் புத்தகம் மிகப் பழைமையான புத்தகமாகக் கருதப்படுகிறது. ஏனெனில் பல்வேறு பிக்குகளால் தொகுக்கப் பட்ட ஸ்ரீ லங்கா சம்மந்தப் பட்ட புத்த மத விவரங்களை கி.பி. 5-ம் நூற்றாண்டில் மஹாநாம மஹாதேராவால் (பிக்குவால்) சிதறிக் கிடந்த குறிப்புகளை எல்லாம் ஒன்றாக சேர்க்கப்பட்டது தான் இந்நூல். பாலி மொழியிலிருந்து ஆங்கிலத்திலும், ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கும் மொழிபெயர்க்கப் பட்டுள்ளதால் தொடர்ந்து படிப்பதற்கு சிரமமாகத் தான் இருந்தது.

அசோகரின் வாரிசுகள் புத்தமதத்தை பரப்புவதற்கு ஸ்ரீ லங்கா சென்றது முதல், போதி மரக் கிளையை கொண்டு சென்றது வரை பல குறிப்புகளும் இதில் கிடைக்கிறது.

தமிழகத்தை ஆண்ட பாண்டிய மன்னன் சிங்கள அரசனுக்கு பெண் கொடுத்து சீரும் செய்திருக்கிறான். ஆனால் அவளுக்கு வாரிசுகள் இல்லாமல் போய்விட்டது. பிறகு பல தமிழக அரசர்களும் சிங்களர்கள் மீது போர்தொடுத்து சென்றுள்ளனர். அவர்களில் முக்கியமானவன் எலரா என்ற சோழன். பசுவின் கன்றினைக் கொன்றதற்காக தனது மகனை தேர் சக்கரத்திலிட்டு கொன்றானென இவனைப் பற்றி ஒரு குறிப்பு வருகிறது.

அவனுக்குப் பிறகும் சில தமிழக அரசர்களும், தளபதிகளும் இலங்கையை ஆட்சி செய்து இருக்கிறார்கள் என்றாலும் அது நீடித்ததாக தெரியவில்லை.

இலங்கையின் ஆதிகால வரலாற்றை மட்டுமில்லாமல் புத்த மதத்தின் தோற்றம், வளர்ச்சி குறித்த கருத்துக்களையே முக்கியமாக இந்நூல் முன்வைக்கிறது. எனவே மகா வம்சம் சிங்களர்களின் புனித நூலாகவும் கொண்டாடப்படுகிறது.

இந்த புத்தகத்தின் ஆங்கில மூலத்தைக் காண இங்கு சுட்டியுள்ள வலை தளத்திற்கு செல்லவும்: www.mahavamsa.org

2 comments:

Unknown said...

அருமையான அனுபவங்களை பகிரும் நல்ல ஒரு தளம்,....

Unknown said...

அருமையான பகிற்வுகளை கொண்ட ஒரு நல்ல தளம் ,...

வாழ்த்துக்கள்