Monday, April 20, 2009

anu aayutha opantham

இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் : CPI(M) மத்தியக் குழு (Rs. 10) வெளியீடு: பாரதி புத்தகாலயம்

இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் (இடது சாரிகளின் நிலைப்பாடு வினாக்களும் விடைகளும்)

தமிழில்: சுப்பாராவ், வீ.பா. கணேசன்

வளரும் நாடுகள் அமெரிக்காவுடனான அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ள வேண்டுமெனில் முக்கியமான சட்ட வரைமுறைகளுக்கு உட்பட்டாக வேண்டும். அவைகளாவன ஹைடு சட்டம், 123 ஒப்பந்த சட்டம் மற்றும் சர்வதேச அணு சக்தி முகமை பாதுகாப்புச்சட்டம் ஆகியனவாகும். இந்த சட்டங்கள் அனைத்தும் அமெரிக்காவின் ராணுவ, பொருளாதார மற்றும் வெளியுறவுக் கொள்கைக்கு ஏற்றபடி தான் இருக்கும். அதுமட்டும் இல்லாமல் அமெரிக்க ராணுவத்திற்கு பகிரங்க ஒத்துழைப்பை அளிக்க வேண்டும். இல்லையெனில் எந்த நேரத்திலும் ஒப்பந்தம் ரத்து செய்யப்படும்.

அவசர அணு சக்தி ஒப்பந்தத்திற்கு முக்கிய காரணம் மின்சாரக் குறைபாடுதான் என மத்திய அரசு கூறுகிறது. தற்போது 1). நீர் மின்சாரம், 2). அனல் மின்சாரம், 3). சூரிய மின்சாரம் மற்றும் 4). காற்றிலிருந்து தயாரிக்கும் மின்சாரம் என பல முறைகளில் மின்சாரம் எடுக்கப் படுகிறது. அதுவும் நூறு ஆண்டுகளுக்கு அனல் மின்சாரம் தயாரிப்பதற்கு தேவையான நிலக்கரி இன்னும் நம்மிடம் இருக்கிறது. அப்படி இருக்கும் போது வெறும் 3% தேவையைப் பூர்த்தி செய்யும் அணு சக்தி மின்சாரம் நம் நாட்டிற்கு தேவையா?

அது மட்டுமில்லாமல் இதர முறைகளில் தயாரிக்கும் மின்சாரத்திற்கு ஒரு யூனிட்டிற்கு 2 முதல் 2.50 காசு வரை ஆகுமெனில் அணு சக்க்தி மின்சாரத்திற்கு 5 ரூபாய் வரை ஆகும். இது எந்த மாதிரியான விலைவாசி உயர்வை ஏற்படுத்தும். அதை எப்படி சமாளிப்பீர்கள்?

40 ஆண்டுகளுக்கு இந்தியாவைக் கட்டுப்படுத்தும் இந்தச்சட்டம் ஞாயமாக தீவிர அலசலுக்கு உட்படுத்தப்பட்டிருக்க வேண்டும். அப்படி இல்லாமல் குறுகிய காலத்தில் ஒப்பந்தத்திற்கு அனுமதி கொடுத்தது ஏன்?

45 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட அணு சக்தி எரிபொருள் விநியோகிப்போர் சங்கம் அனுமதி அளித்தாலும் அமெரிக்க காங்கரஸ் ஒப்புதல் அளிக்க வேண்டும். அது மட்டும் இல்லாமல் ஒவ்வொரு வருடமும் அமெரிக்க அதிபர் இந்திய அரசாங்கத்திற்கு நற்சான்றிதழ் வழங்க வேண்டும். இல்லையெனில் ஒப்பந்தம் ரத்து செய்யப் படும்.

முக்கியமாக பல கோடி ரூபாய் மதிப்புள்ள இந்திய நாட்டிற்கு சொந்தமான அணு உலைகள் இந்த ஒப்பந்தத்தால் அணு சக்தி முகமையின் கட்டுப் பாட்டின் கீழ் வந்துவிடும். ஒப்பந்தம் ரத்து செய்யப் பட்டால் மறுபடியும் எப்படி அதை மீட்பீர்கள். அதற்கான எந்த சரத்தையும் ஒப்பந்தத்தில் சேர்க்காதது ஏன்?

அமெரிக்காவுடனான இந்த ஒப்பந்தம் மூலம் இந்திய நாட்டிற்கு காங்கிரஸ் தலைமையிலான அரசு துரோகம் இழைத்ததுவிட்டது என்று சொல்லி மக்ஸிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சி வெளியிலிருந்து அளித்து வந்த ஆதரவை விளக்கிக் கொண்டது.

ஒருவேலை ஒப்பந்தம் ரத்து செய்யப் பட்டால் எந்த மாதிரியான சிக்கல்களை இந்தியா சந்திக்க வேண்டியிருக்கும் என்பன போன்ற கேள்விகளுக்கான பதிலாக இந்த 40 பக்க புத்தகம் உள்ளது. CPI(M) -ன் மத்திய திட்ட அறிக்கையை தமிழில் மொழி பெயர்த்துள்ளார்கள்.

பி.கு: இந்த ஒப்பந்தம் மூலம் அமெரிக்காவில் 2500-லிருந்து 5000 புதிய வேலை வாய்ப்புகள் உருவாகுமென அமெரிக்க வெளியுறவு அமைச்சர் காண்டலினா ரைஸ் தனது நிரூபர்கள் சந்திப்பில் கூறியுள்ளாராம்.

2 comments:

priyamudanprabu said...

///
40 ஆண்டுகளுக்கு இந்தியாவைக் கட்டுப்படுத்தும் இந்தச்சட்டம் ஞாயமாக தீவிர அலசலுக்கு உட்படுத்தப்பட்டிருக்க வேண்டும். அப்படி இல்லாமல் குறுகிய காலத்தில் ஒப்பந்தத்திற்கு அனுமதி கொடுத்தது ஏன்?
///

எல்லாம் பணம்
இங்கு இருக்கு அரசியல் பணமுதலைகள் தன் சுய லாபத்துக்காக செய்தது

Unknown said...

நீங்கள் சொல்வது ஒரு வகையில் சரிதான் பிரபு.